உள்நாட்டு

புத்தாண்டு போக்குவரத்து..!
புத்தாண்டு போக்குவரத்து..!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் (13) தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. 
 
நேற்று மாலை முதல் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், கூட்டத்திற்கு ஏற்ப மேலதிக பஸ்கள் இயக்கப்படும்.
இன்றும், நாளையும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப தனியார் பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படும்.
 
இன்றும், நாளையும் ரயில் சேவைகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன இருப்பினும், அனைத்து கடுகதி ரயில்கள் , தபால் ரயில்கள் மற்றும் நகராந்திர கடுகதி ரயில்கள் வழமை போல் இயங்கும்.
பொல்கஹவெல, அவிசாவளை, புத்தளம் மற்றும் காலி ஆகிய பகுதிகளிலிருந்து கொழும்பு வருவோருக்கான விசேட ரயில் சேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
நல உதயம்..!
நல உதயம்..!
Sk Queens Campus
Sk Queens Campus
க. பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்
க. பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

வெளிநாட்டு

அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
ஈரானுக்கு ஆதரவளிக்க சீனா மற்றும் ரஷ்யா எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேவைப்படும் போதெல்லாம் அந்தத் தலையீடுகளுக்கு எதிராகச் செயற்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க தாக்குதல்களால் ராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறுவதும், அதிகரித்துள்ளது.
ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி அமெரிக்கா சரியாக அறிந்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், தேவையான இடங்களில் அவர்களை நேரடியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.
 
புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டிப் பேசிய ஹெக்செத், அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரான் இராணுவத்தின் மன உறுதி சிதைந்துள்ளதாகக் கூறினார். இதன் காரணமாக வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேறுவதும், சிரேஷ்ட தலைவர்கள் மத்தியில் கடும் விரக்தி ஏற்பட்டுள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
எங்களிடம் தெரிவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஈரானுக்கான தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவை. கடந்த ஒரு மாதத்திற்குள்ளேயே போருக்கான நிபந்தனைகளை நாங்கள் தீர்மானித்துவிட்டோம். வரும் நாட்கள் மிகவும் முக்கியமானவை, என அவர் தெரிவித்தார்.
 
கடந்த சனிக்கிழமை தாம் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு விஜயம் செய்ததாகவும், அங்கு ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நேரடியாக அவதானித்ததாகவும் ஹெக்செத் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கைது!
முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கைது!
1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!
1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!
மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!
மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!

அண்மைச் செய்திகள்

புத்தாண்டு போக்குவரத்து..!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் (13) தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. நேற்று மாலை முதல் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், கூட்டத்திற்கு…

நல உதயம்..!

நிகழ்வோடு உதயமாகிறது நல உதயம் சமூகக்குரல் புதிய அலை கலை வட்டம் அதன் சமூக நலக்குரலான நல உதயம் அணியை மீளுருவாக்கம் செய்துள்ளது. இதன் அறிமுக நிகழ்வும் விருது விழாவும் மற்றும் சித்திரை புத்தாண்டு முன்னிட்டுநடத்தப்படும்மாற்றுத்திறனாளிக ளுக்கானவிளையாட்டு விழாவும்வரும் 26.04.26 அன்று…

இன்றைய வானிலை..!

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் மாங்குளம், பேசாலை மற்றும் நெடுங்கேணி போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்…

Sk Queens Campus

வெள்ளம்பிட்டியில் அமையப்பெற்றுள்ள SK Queen Campus சின் முதலாவது டிப்ளோமா பட்டமளிப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை 06.04.2026 பண்டாரநாயக்க ஞாபகாார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எஸ்,கே. குயின் கெம்பசின் தலைவி கலாநிதி சப்னாஸ் சிபான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

க. பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

மொத்தமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிலே 1,76,527 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்குரிய அடிப்படை தகமையை பெற்றவர்களாக இருக்கிறார்கள். – பிரதிப் பரீட்சைகள்ஆணையாளர் சுபா விஸ்வநாதன் https://lionpressmedia.com/wp-content/uploads/2026/04/Lion-Press-2026-04-01T213313.187.mp4 வீடியோ: சமூக வலைத்தளம்