11 இந்திய மீனவர்கள் கைது..!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக, யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஒரு படகும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.







