உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 06.07.2026 அன்று புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் முனைவர் ரஷ்மி ரூமி, துணை செயலாளர் மீரான் ஜி மற்றும் உலகத்தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தில் இலங்கைக்கான பிரதம ஆலோசகர் சபை தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் இணைந்து இந்த நியமனங்களை வழங்கி வைத்தனர்.

அதே வேளை இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்ன விருது பெற்ற டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் விருதினை உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கலைக்கூடத்தின் சார்பில் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஏனைய இலங்கையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமன கடிதங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமாதான தூதர் ஷேக் அமானி,சந்திரிகா நிரோஷன்.நிதுஷா, ஜாஸ்மின், ஹபீபா, ஷாமீலா, இர்ஷாத்,ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கவிஞர் எழுத்தாளர் ராதா மேத்தா,சிரேஷ்ட அரசியல்வாதி முபாரக் அப்துல் மஜீத், தமிழன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஜவுபர், ஹாஷிம ஓமர் பவுண்டேஷனின் பணிப்பாளர் திருமதி மரியம் ஹாசிம் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வருகை தந்த அதிதிகளுக்கு பொண்ணாடை போற்றி, சந்தன மாலை அணிவித்து புரவலர் ஹாஷிம் ஓமர் கௌரவம் செய்தார்.

கலைக்கூடத்தின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொழிலதிபர் ஷேக் அமானி நினைவு சின்னங்களை வழங்கினார்.

உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கைக்கான உத்தியோக பணிகள் இன்று முதல் ஆரம்பமாகுவதாக உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் கலாநிதி ரஷ்மி ரூமி இதன் போது இங்கு குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

photography  farook issam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *