ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 19ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (07) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் எம்.இஸட்.அஹமட் முனவ்வர் , சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டிரோன் பெர்னாண்டோ , தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜவ்பர்,சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஜிப்ரியா இப்ராஹிம், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணிப்பாளர் மரியம்,அர்ஹம் சுலைமான் மற்றும் பெற்றோர் எனப்பலர் கலந்துகொண்டனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர்
புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆர்.அபிக் ஷா-பண்டாரவல,ஆர்.நுஸ்னா-பொலன்னறுவ,எம் .ஜே.எப்.ஹப்ஸா-கண்டி,எம்.எம்.எச் .பேகம்-புத்தளம் மற்றும் எஸ்.பானு-மிஹிந்தலை ஆகியோர் புரவலரிடமிருந்து மடி கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது எழுத்தாளர் அல் ஆலிமா கமருன் நிஷா அஹ்மத் முர்சி எழுதிய முற்போக்கு தெவிட்டாத தேன் துளிகள் நூலும் வெளியிடப்பட்டது.நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொண்டார்.

photography by

Issam farook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *