மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளில் இன்று (17) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக நீர் குழாய்கள் இடமாற்றம் செய்யப்படுவதால், இன்று மாலை 4.00 மணி முதல் நாளை (18) காலை 7.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.