9ஆவது அமர்வு கண்ட
ஹைக்கூ கவியரங்கம்
புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கத்தின் 9ஆவது அமர்வு நேற்று (15.02)கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் மாலை 4.00மணியளவில் நடைபெற்றது.
இந்த அமர்வுக்கு செல்வி கே.கிரிஷா கவித்தலைமை ஏற்று மிகச்சிறப்பாக நடத்தினார் ஹைக்கூ எழுதுவது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் பங்கேற்று ஹைக்கூ கவி படைத்தவர்களில் சிலரைப் படங்களில் காணலாம்.
