‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பின்னோக்கித் தள்ளவோ அல்லது முடக்கவோ பயன்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘REBUILDING SRI LANKA’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அவர், அனர்த்தங்களைக் காரணமாகக் காட்டி அரசாங்க பொறுப்புகளில் இருந்து விலகப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இதுவரை சூறாவளியால் 24 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 6,000 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும் 1,10,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, அபாய நிலையில் உள்ள 10,000 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.