அனர்த்தத்தால் அழிந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது சேகரிக்கப்படுகிறன. டிசம்பர் 15 பிறகு, மாவட்ட மட்டத்தில் விசேட சேவை மூலம் பாதிக்கப்பட்ட வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, அவை பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

அனர்த்தம் காரணமாக அழிந்த வாகனங்கள் மற்றும் ஆவணங்கள் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர் வழியாக பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படும், மற்றும் விசாரணைகளை ஆரம்பிக்க பல துறைகளின் அறிக்கைகள் முக்கியமாகப் பயன்படும்.

மேலும், அதிக தொலைபேசி அழைப்புகளை சமாளிக்க விசேட அலகு நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்கள் 0707188866 என்ற WhatsApp இலக்கத்தில் தகவல்கள் அனுப்பி உதவலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *