சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களும் குருநாகல் மாவட்டமும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.